சுடர்களின் காலங்கள்

சுடரொவொன்றும் சூரியனாய் சுடர்ந்த
தொரு காலம்!
“புதைந்த கனவொவொன்றும் போய்ச்
சுடரில் முகம் காட்டி
ஒளிருமெனும் நம்பிக்கை தனில்
உயிர்த்த தக்காலம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறை (த்) தாய்

ஒருவேளை முக்குருத்தில் ஒன்றே
வளர்ந்துயர்ந்து
இருநூறு கோடிசேர்த்து
எக்கடனும் அடைத்திருக்கும்….
ஏன் அதற்குள் மரணத்தை இவைக்கும்
பரிசளித்தாய்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாவல் ஆச்சி

நாவற் பழங்கள் நம் ஊரின் ‘பெரி’ப் பழங்கள்.
நாவற் பழங்கள்
நம் தமிழின் ருசிப்பழங்கள்.
நாவற் பழத்துக்கும்
நம் ஆச்சி மாருக்கும்
யாது தொடர்பு..நம் ‘ஒளவை’ முதற்கொண்டு ?
பார்த்தேன் யான்… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முக ‘வரி’ 

 

‘ஆட்டுக்கல் அம்மி’ தனில்அரைத்த
தோசை சம்பல்,
‘திரிகையிலே’ பயறு திரித்துசெய்த பலகாரம்,
‘மாற்றுலக்கை’ போட்டுரலில்
இடித்த அரிசிமா அப்பம், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வீராப்பு 

 
 
நீதியெது நியாயமெது தெரிகிறதா நாளும் ?
நீங்காத சோகம் நம் நெஞ்சிலிடும் கோலம்!
சாதியினால் சமயத்தால் சாகவில்லை ஓலம் 
சாத்தான்கள் கருவறையில்….மனிதமதா வாழும் ?

Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என் கவிதை

கடவுளையே விமர்சிக்கும் போது…அந்தக்
கடவுளையே மறுதலித்து ஒதுக்கும் போது
கடவுள்மேல் குறைகண்டு கொதிக்கும் போது
கடவுளிலே குற்றங்கள் சாட்டும் போது
கடவுளென்று ஒருவனில்லை என்று கூடக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அனிதா

உன் அறிவின் ஆழம்,
உன் முயற்சி, உன் தகமை,
உன்னுடைய ஆற்றல், உனது அடைவு மட்டம்,
உச்சம்தான்….!
ஆனாலும் மூட்டை தினம் சுமந்தும்,
“பிச்சை புகினும் கற்கை நன்றே ” என்ற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றம் கடிதல்.

 

கத்தியின்றி இரத்தமின்றிக் கணமும்…முக 
நூலில் …’வாய்
யுத்தம்’ புரிந்துலகை ஊரைத் திருத்திவிட 
கத்திக் குளறி, 
‘சரி –பிழைக்கு’ ஆதரவாய் 
குத்தி முறிந்தபடி,
குமுறி வெடித்தபடி, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்வு

 

நிதமுமொரு ஏவுகணைப் பரிசோதனை நடாத்தி 
உலகப்போர் நெருப்புக்கு 
நெய் ஊற்றும் ‘கிம் ஜொங் உன்’.
கண்டனமும் தொடர்ந்து கவலையும் தெரிவித்து 
நாசகாரி கப்பல்கள் நகர்த்தி மிரட்டும் ‘டிரம்ப்’.
நவீன இனச் சுத்தி கரிப்பாய் 
மனிதத்தை  Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தீராப் பலிகள்

யாருடைய தலையை எடுத்து வருகிறாளோ
‘யாழ் தேவி’?
பாவம் என்செய்வாள் அவள் ‘இரும்பி’!
தேடி உனைத்தேடி திரியவில்லை அவள்:
நீயாய்த்
தேடி அவள்வரும் திசைஏறிப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் ?

‘சிறுத்தீவுக்’ கடலில்
சிறிய ஒரு ‘குல்லாவில்’
பொறிகளான’ஆறு ‘ ஒரேவயது இளம்புதிர்கள்
உற்சாக பிறப்பு கொண்டாட்ட
மயக்கத்தில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான பலம்

இருள்நகர்ந்து கவிவதுவாய், பனியின் மூட்டம்
எழுந்துவந்து மூடுவதாய், மயக்கம் சோர்வு
மருவி எமை விழுங்குவதாய், இடரும் துன்ப
வகைபலவும் அடிக்கடி வந்தென்னை மூடி
இரக்கமற்று வதைக்கும்! என் சுதந்திரத்தை, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதிநீயே….

எது எந்த வேளையில் எனைச்சேர வேண்டுமோ
எழுதிநீ தந்து விடுவாய்.
இடிவீழும் போதிலும் இடியாமல் மீட்டெனை
இதமாயுன் நெஞ்சில் நடுவாய்.
“விதியென்ன” கேட்கையில் “விளைவென்ன” தேடையில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

செயல்

கதைக்கின்றோம்…
தொடர்ந்து கதைத்துக்கொண் டிருக்கின்றோம்!
கதைப்பதற்குச் சார்பெதிராய்
கட்டுக் கட்டாக
ஆலோசனைகள் ஆயிரம் எழுதுகிறோம்!
நேற்றுப் போலன்றி
அனேகமாய் எல்லோரும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஈனம்

நிழலினிலே நிற்கையிலே நிழலின் நன்மை,
நிழலினது குளுமை மற்றும் நிழலின் மேன்மை,
நிழல் வெயிலைக் குடித்து இருள் பூசி வெந்து
நெருப்பு வெக்கை தனைத்தாங்கி அருளும் தன்மை,
நிழலின் ஈகம் அதன் பெருமை இவற்றைக் காணோம்!
நிழலென்ன நிழலென்று அலட்சியமாய்
நிழல்மடியில் ஆறி…களைப்பாற்றித் தூங்கி
நிழலைக் கணக்கெடாமற்தான் நாமும் வாழ்வோம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment