ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம்.
கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம்.
பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும்.
பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்…
தங்கள் மதச் சாதிச்
சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை
தேர்ந்துகொள்ள
கருவறையைப் பாவித்தார் காவாலிகள்!
எட்டுத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம் போற் பரவும் நிலவின் ஒளி!
நிலவு விளக்கொளிர… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உங்கள் கவிதைகளை நான் எழுத முடியாது

நீரே எழுதும் உம்முடைய கவிதைகளை!
நீரே எழுதும்
நீர் விரும்பும் கவிதைகளை!
நீரே எழுதும்
உம் பாணிக் கவிதைகளை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லைகள்

எல்லைகள் அற்ற கடல்.
எல்லைகள் அற்ற வான்.
எல்லைகள் அற்ற வெளி.
எல்லைகள் அற்ற நிலம்.
எல்லைகள் அற்ற திசை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தற்காப்பு

யாரையும் நம்பிக் கிடக்காமல்
நம்மைநம்பி
வாழ்வதே உசிதமென
வடிவாக நின் குருதி
கூறுகிற தத்துவத்தைக்
குறித்துக்கொள் மானுடவா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழி(லி)

இங்குமட்டும் அல்ல…
இன மத பேதமின்றி
எங்கும்….சமர்களிடை சிக்கி
ஏதும் புரியாமல்,
வளர்ந்தொளிரும் முன்பே
தேய்த்தழிக்கப் பட்டு
பழிவாங்கப் படுகிறார்கள்
பாலச் சந்திரன்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சுற்றும் புவி

தனியொரு வனுக்கு உணவு இங்கு இல்லை
எனிலோ…ஜெகத்தை
எரிக்க எந்த பாரதியும்
இல்லாச் சமூகத்தில்….
உணவற்று வாடி எங்கோ
உள்ளதில் ஒருகவளம் திருடி உண்டு,
பசிதணித்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நேயம்

குழந்தையின் கரங்களிலே
குருதி கொட்டக் கிடக்குதின்னோர்
குழந்தையின் துண்டித்த கரம்!
அதனின் முகமெல்லாம்
இரத்தம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திருட்டு

கோடி கோடி திருடும் பெரும் குடி
கோட்டுச் சூட்டு வக்கீல் வழக்கென
நாடே கண்டு நகைத்துப் பழிக்கவும்
“நாங்கள் புனிதர்தாம்” என்பதாய்…ரோசமோ
சூடு சுரனையோ அற்றுப் பெயர் புகழ்
தொலைத்திடா தெழும்! நீதியும் அன்னவர்
போடும் வேடம் புரிந்தும் புரியாததாய்
பொய்க்கு உதவிடும்! புவியோ மறந்திடும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பெருமை

“எம்மிடமும் அன்றே இருந்ததொரு
யானையென”
எம்பெருமை பேசி,
இன்றுவரை அதைவைத்தே
எம்காலம் ஓட்டி,
இன்று ஒரு பூனைகூட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வறுமை

படைப்புக்கள் தாம் எதையும் பேசவேண்டும்.
பாடவேண்டும்.
வெடித்துச் சிரிக்கவேண்டும்.
வெவ்வேறு இரசங்களுடன்
ஒருஉணர்வை, ஏதோஓர் உண்மையை, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொட்டு

என்ன நடந்தது ?
இன்று மட்டும் இரவுவானில்
இரத்தத்தில் நிலாப்பொட்டை வைத்துவிட்டுப்
போனது யார்?
யாருடைய ரத்தம்?
தனதா? பிறனினதா?
விண்ணிலும் தேர்தலா?
வானம் வேட்பளானோடா?

(கிரகண இரவு அன்று (31.01.2018) தோன்றிய இரத்த நிலவு )

Posted in கவிதைகள் | Leave a comment

பேதம்

இவ்வானும் முகில்களும் இருகரையும்
தென்னைகளும்
கொடுத்துத்தான் வைத்தவைகள்!
குனிந்து தினம் தம் முகத்தைப்
பார்த்து இரசித்துளன….
ஆற்றுக் கண்ணாடியிலே….!
“ஆற்றுக் கண்ணாடி
அதன்முகத்தை எங்குபார்க்கும்?”
கேட்கின்றேன்….
இயற்கையிலும் பேதமுண்டா? புரியலையே….!

Posted in கவிதைகள் | Leave a comment

உன் இசை

சிலரின் இசை…தேன்!
சிலரின் இசை…மது!
சிலரின் இசை…பால்!
சிலரின் இசை…தயிர், நெய்!
சிலரின் இசை…தண்ணீர்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment