Author Archives: Webadmin

அனைத்துலகும் அடங்கிய அகாலம்!

உலகம் முழுவதும் ஒரேநேரம் சிறையிருக்கும். உலகம் முழுதும் ஒரேசமயம் தனித்திருக்கும். உலகம் முழுவதும் ஒரேநேரம் பயந்திருக்கும். உலகம் முழுதும் ஒரேசமயம் நேர்ந்திருக்கும்.

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுளா இது?

உயிருள்ள தெனச்சொல்ல முடியாது; ஏனென்றால் உயிரின் அடிப்படைக் கலமல்ல இது! எனினும் உயிரில்லை எனவுமெண்ண முடியாது; ‘நிறமூர்த்த’

Posted in கவிதைகள் | Leave a comment

பழி சாய்க்க வா!

இடரேதும் தொடராதெம் பொழுதோடணும் –எங்கள் இரு கண் உன் எழில்முற்றும் நிதம் காணணும். கொடுமைகள் தொலைந்தெங்கள் குடி வாழணும்–உந்தன் குளிர் வேலின் ஒளியில் நாம் முடி சூடணும்!

Posted in கவிதைகள் | Leave a comment

எமக்கின்று துணை யாரு?

நீல மயிலேறி நீழல் எனமாறி நீயும் வரும்போது அருகாக நின்று… நினைக்கண்டு நெஞ்சு நிறை அன்பு நேர்த்திகளும் தீர்த்து மகிழோமோ? காலப் பிழையென்று கண்ணும் உணராத காலன் எமைத்தீண்ட வரும்போது

Posted in கவிதைகள் | Leave a comment

முருகா முருகா முருகா

நிதமும் வருவாய் மயிலில் நிழலாய்ப் படிவாய் உயிரில் விதியின் சதியை உதையும் கழலே வினையை பொடிசெய் கனலே குளிரே (முருகா..)

Posted in கவிதைகள் | Leave a comment

எம்மைத் தேற்றடா!

ஈர நல்லையின் வீர ஷண்முகா! இன்றிடர் களைந் தெம்மை நோக்கடா! பாரை மாய்த்திடும் பாவ நோயினை பாடை யேற்றடா…பஸ்பமாக்க வா! வேரிலே விழும் வேதனை இடர் வெட்டி வீழ்த்தடா! மேன்மை சேர்க்க வா!

Posted in கவிதைகள் | Leave a comment

நின்று தடு ஊறு!

கவிதை என்ற உடலில் வாழும் உயிராகி கனவு கோடி நனவில் நித்தம் தருவாயே செவியில் வீழ்ந்து இதயம் தோய்ந்து மனஏரி தெளியவைக்கும் கவி அன் றாடம் அருள்வாயே! தவிலிசைக்கு தலைஅசைக்கும் திரு வீதி தமிழ் மணக்க….எனது சிந்தும் இரசி நீயும்.

Posted in கவிதைகள் | Leave a comment

ஜன நாயகம்

என் விருப்பினை எனது தெரிவினை “இவர்க்கு” என்று எவர்க்கும் தெரியாது இன்று புள்ளடி இட்டேன்; திரும்பினேன்! “இஃது என் ஜனநாயகக் கடன்… அதை நன்று செய்தன்” என்றார்த்தேன்; “அது மட்டும் நாளை வென்றிட வேணும்” பிரார்த்தித்தேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

தகுதி

தங்கள் தரப்பில் தனித்துத் திசைக்கொன்றாய் மங்கிக் கிடந்தவரை, வாய்ப்புகளை, கணம் முயன்று ஒன்றாக்கி…எல்லோரும் ஒரே குரலில் கூவவைத்து,

Posted in கவிதைகள் | Leave a comment

கருகக் கூடுமோ?

ஊர டங்கு தொடர்ந்து வளர்ந்தது. உயிர்ப் பயத்தில் பார் அடங்கிக் கிடந்திடும் காலம்…இங்கும் கனத்துத் தவிக்குது. கவலை பேயாய்க் கவிந்து படர்ந்தது. வேரில் விழுந்து அரிக்கும் கிருமியால் விழுதும் நொந்து விருட்சம் முழுவதும்

Posted in கவிதைகள் | Leave a comment

இறைவரை கண்டோம் நேரில்!

தெய்வங்கள் தம்மை நேரில் திசைகளில் கண்டோர் இல்லை! தெய்வங்கள் சிலையாய் நிற்கும்; செயற்படும் அழகைப் பார்த்து உய்தவர் இல்லை! நஞ்சைத் தான் உண்டு உலகைக் காத்த

Posted in கவிதைகள் | Leave a comment

புதுமை ஆண்டு

புதிய தானதோர் ஆண்டு மலர்ந்தது! புதுமை இம்முறை….யாரும் எவர்களும் புதிதுடுத்து உயிர்த்து திருத்தலம் போய்…அறுசுவை உண்டு சிலிர்த்திடும் கதைகள் இல்லை! வீட்டில் இருந்துயிர் களித்து குடும்பத்தி னோடு கதைத்துண்டு

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பு வாழ்வு

தெளிவாச்சு வானம்! தெளிவாச்சு ஆழி! தெளிவாச்சுக் காற்று! தெளிவாச்சு கங்கை! “ஆம்…மீண்டும் எங்கள் அழகியற்கை வான் மலைகள் ஆறின் தெளிவோட்டம் அதிசயம்”

Posted in கவிதைகள் | Leave a comment

உணர்ந்ததை மறந்தால்….

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி அழியலை பூமியின் அழகு. ஆழவந் தேபத் தாயிரம் ஆண்டா அறியலை நீ..புவி மனது. பாயிரம் தானே பார்த்தனை இன்னும் பயிலலை யே புவி அறிவு.

Posted in கவிதைகள் | Leave a comment

ஊர் மாறி உரு மாறி

காலாற யான் நடந்த களிமண் வீதி காப்பற்றாய் மாறிநிற்கும்! காற்றை வாங்கி மேலெல்லாம் ஒத்தடங்கள் பிடிக்கும்…மூலை வேம்பு நின்ற இடத்தில் தொலைத் தொடர்பைக் காவும் கோபுரமா நிழல் விரிக்கும்? கிடுகு வேலி குறைந்தெங்கும் மதில் சூழும்…மாரி வெள்ளம்

Posted in கவிதைகள் | Leave a comment