Category Archives: கவிதைகள்

என்றுதான் மாறும் எம் விதி?

ஒருகோடி துன்பங்கள் தருகின்ற காலத்திற்- குண்மையாய் இரக்க மிலையா? உயிரதும் இதயத்தில் உருக்கமும் கருணையும் உளத்தில் ஈரமுமில்லையா? தருகின்ற துன்பங்கள் தம்மையோர் இடைவெளி தனில் தரும் குணமுமிலையா?

Posted in கவிதைகள் | Leave a comment

என்ன செய்யப் போகிறோம்?

காலகாலமாக நம்மைக் காத்திருந்த தெய்வமும் கையை விட்டகன்றதெங்கு? மாய்கிறோமே நித்தமும். ஆலகாலம் உண்டு அன்று அன்பர்உயிர் மீட்டதும் அற்புதம் புரிந்ததும் மறந்ததேன்…அதன் மனம்?

Posted in கவிதைகள் | Leave a comment

எப்படித்தான் கிளைக்கும்?

மரணத்தின் தூதுவர்கள் வருகின்றார் மிக அருகில்! எருமைகளில் அல்ல எவரின் கண்ணும் காணாக் கிருமிகளில் ஏறிக் கிளைக்கின்றார் திசை திக்கில்! எமனெறியும் பாசக் கயிறு

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் வழி செய்வோம்!

நாளை எதுதான் நடக்கும்? எனத்தெரியாக் காலம். நோயும்,கவலை, துயர், சாவும், யாவரிலும் தொற்றும், தனிப்படுத்தல் சிகிச்சைகளும்,

Posted in கவிதைகள் | Leave a comment

எழு மனிதா!

விதி என வாழ்ந்திடும் வில்லங்க வாழ்க்கையை விட்டின்று வெளியில் வா மனிதா! மேவியே…சாத்திரம் வெற்றி நல்காது நின் வேர்வையை நம்படா மனிதா! சதிபுரி காலமும் தடையிடும் துன்பமும் தாண்டி நீ கால்பதி மனிதா!

Posted in கவிதைகள் | Leave a comment

தங்கப் பொழுது

கண்களில் கோடி கனவு மிதக்கக் களித்தது அந்நாளே -எங்கள் காதல் மடியினில் கன்றுகளாகக் கலந்தது அந்நாளே -புதுப் பண்வகை பாடி பல விளையாட்டுப் பயின்றது அந்நாளே -உயிர்ப்

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் குரல்

காலத்தி னுக்குக் கருணை சிறிதுமில்லை! வேத நிபுணனையும், வீர மறவனையும், கோடி திருவின் மேல் குடியிருக்கும் குபேரனையும், ஆளும் அரசனையும்,

Posted in கவிதைகள் | Leave a comment

எம்மை இன்றேன் கதறவைத்தாய்?

“எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டான்” எப்படி நடந்ததிது? இது போகும் வயதல்ல! இருக்கும் இடமெல்லாம் எமைச்சிரிக்க வைத்தவனே! மருந்தாய்ச் சிரிப்பருளி

Posted in கவிதைகள் | Leave a comment

மனிதம் என்று மீள்வது?

இப்படியோர் காலம் மீண்டும் எழுந்ததிங்கு! துப்பாக்கி பூபாளம் பாடிய துயர் நாளில் கூடித் திடீரென்று குண்டுவிழும். வேட்டதிரும். சாவரக்கன் ஆட

Posted in கவிதைகள் | Leave a comment

எம் மண் இதம்

காற்றினில் ஏறியே கவிதைகள் சொன்னோம். கடலதன் ஆழமும் நீளமும் கண்டோம். ஊற்றுநீர்ச் சுவையில் அமுதம் உருசித்தோம். ஊர் வயல் வெளியிலும் உயிரைத் தொலைத்தோம். சேற்றிலும் செல்வம் செழிப்ப தறிந்தோம். திசையெலாம் சொர்க்கம் சிரிப்ப துணர்ந்தோம்.

Posted in கவிதைகள் | Leave a comment

மகிழ்வு?

நிலவின் ஒளியில் நெடுநேரம் குளித்து அழகிரவு நனையும் அகாலப் பொழுது இது! பாலால் அபிஷேகப் பாணியிலே பெளர்ணமியின் பாலில் அயலும் பரவசமாய் முழுகிடுது!

Posted in கவிதைகள் | Leave a comment

பசி

இரவைக் கடுங்கோப்பி என்று பருகுகிறேன்! எரியும் பகலைச் சுடுபாலாய்க் குடிக்கின்றேன்! நட்சத் திரங் கள்யான் பானங்ககளில் கலக்கும் கற்கண்டு;

Posted in கவிதைகள் | Leave a comment

கால அலைகரைக்காக் கற்பெயர்கள்

அலைகள்… கரையில் அமிழ்ந்த காலடித்தடத்தை அழித்துவிட்டுப் போவதுபோல்… அனுதினமும் காலத்தின் அலைகள்… புவியில் அமிழ்ந்த உயிர்களின் தடத்தை

Posted in கவிதைகள் | Leave a comment

நிலையாமை

யார்வயிற்றில் யார்பிறப்பார் யாரு கண்டது? -அதை யார் முடிவு செய்தவர்கள் யார் உரைப்பது? பேய் வயிறோ நாய் வயிறோ யார் உணர்வது? -வந்த பின் அழுது என்ன பயன்…யார் நினைத்தது?

Posted in கவிதைகள் | Leave a comment

சொல் நன்றி

இத்தனைபேர் வாழ்த்தி நிற்க என்ன தவம் புரிந்தேன்? இத்தனை பேரின் நேசம் பெற எதை யான் செய்துவிட்டேன்? இத்தனை பேர் போற்றினரே… எக் கைமாறு செய்வேன்?

Posted in கவிதைகள் | Leave a comment