Category Archives: கவிதைகள்

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும் திசைகளிற் பூத்தன மலர்கள். தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும் செடிகளில் தோன்றின தளிர்கள். பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும் பின் எழும் புதுப்புதுப் பயிர்கள்.

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை இந்த நாட்களிலே! மனிதர்கள், சராசரி மனிதக் குணங்களுடன் புறத்திலும் அகத்திலும் புதிர்ப்போலி வேசங்கள்

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து, என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து, என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு, என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து, ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து, ஆயிரம் கதையளந்து,

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான் அங்கும் இங்குமே செய்திகள் பேசின. அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி அன்று… போரிடை வந்திட்ட செய்திகள் முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால்

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்; நேற்று மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாய் வசித்து மகிழ்ந்துயிர்த்த ஊரது; நிம்மதியாய் உண்டு களித்துறங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது. இயற்கையை அடக்க எவராலும் இயலாது. இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது. இயற்கை ஏன் மாறுதென்று எவரும் கேட்கலாகாது.

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி! எப்படித்தான் குருதி உடலுள் சுழன்றோட உயிர்துடித்து இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட…

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம் சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல் கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர்

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன் ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து அற்புதம் செய்பவரோ சில பேர்களே! ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும், தினந்தினமும் பாலாறு பாயாத போதும், எம் நிலம் சிரிக்கும். சாவைத் துரத்திச் சரித்து நம் திசையெங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும் பிறர்பற்றி எனக்கென்ன? அவர்க்கு என்ன தெரியும்” என்ற அலட்சியமும், அபரிமித ஆற்றல் பலம் திறனும்,

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள் அடி ஆழமுள்ள உனதாற்றில்… விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில். களமாடல், காதல், கடல் தாண்டி மோதல், கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில்

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்… இந்த உலகை வதைத்தவன்…தன் கோரச் செயலுணர்ந்து, கொடுமைக்குத் தண்டனையாய் ஊர்தனது சாவை உளம்மகிழ்ந்து கொண்டாட

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே உருவாச்சு கிழக்கில் ஒளியின் முதற்துளியும்? அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’ ‘விந்து’ எவையெவைகள் புணரப் பிறந்ததென்ற

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின் புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள் குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்; விழிகசியும்; பக்தி மிகும்.

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!