Category Archives: கவிதைகள்

மலைத்தோம் கண்டு

தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து, சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம், வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள் வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள், மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு

புது விதி எழுதிடா!

கண்ணா லுனைக் காண எனக் கண்ணீருடன் கதறும்… கையற் றவர் கால ற்றவர் கதையை மறந்தாயோ? புண்பட்டவர் நொந்திற்றவர் புதிரை அவிழ்க்காயோ?

Posted in கவிதைகள் | Comments Off on புது விதி எழுதிடா!

அறிக!

பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,பாறவில்லை மண்ணின் அழகு.பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்பச்சையுடை போக்குந் தனக்கு.கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்கொண்டுதரும் சொர்க்க அமுது.

Posted in கவிதைகள் | Comments Off on அறிக!

யான்

அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும் அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும் குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக் குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன் ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன்.

Posted in கவிதைகள் | Comments Off on யான்

அக்கப்போர்

தேர்தல் வருகிறது – இந்தத் தேசம் முழுதும் அடித்துப் புரளுது. ஊர்கள் கொதிக்கிறது – எங்கும் உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது. தேர்தலை வெல்வதற்கு – தத்தம் திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி

Posted in கவிதைகள் | Comments Off on அக்கப்போர்

ஒரே காற்று

வீசியது ஒரே காற்று; எமக்குமேல் சுழன்றடித்து வீசிற்று ஒரே காற்று; அவன்மீது அது அள்ளித் தூவிற்று பூக்களை, சுகந்தம், மகரந்தத்தை. தூவிற்று என்மீது தூசியை, மணல் மழையை.

Posted in கவிதைகள் | Comments Off on ஒரே காற்று

புயலை எதிர்வுகூறல்

எதைநாங்கள் எதிர்வு கூறி இருந்தாலும் அதுஎன்ன எண்ணி, அது என்ன முடிவெடுத்து, எந்த வழியில் இயங்க நினைக்கிறது என்பதைநாம் முழுதாய் அறிய இயலாது. எதிர்வு நாம் கூறியதில்

Posted in கவிதைகள் | Comments Off on புயலை எதிர்வுகூறல்

இந்த இரவு

இந்த இரவு வழமையான இரவல்ல! இந்த இரவு… இடைவிடாத மழைப்பொழிவை, இந்த இரவு… எங்கும் வெள்ளக்காட்டை, இந்த இரவு…

Posted in கவிதைகள் | Comments Off on இந்த இரவு

திருவெம்பாச் சொர்க்கம்

காலையைப் பனி கட்டிப் பிடித்துமே கருணை யற்று உறைந்திட வைத்திடும் வேளை; பிரம்ம மூர்த்தத்தின் பின்னான வேளை; நடுங்கக் குளித்துச் சிவசின்னம் சூடி… காற்று, சாரல், இருள், கூதல் சூழவே கோவில் செல்வோம்! அதி காலைப்

Posted in கவிதைகள் | Comments Off on திருவெம்பாச் சொர்க்கம்

பொங்குகிறோம் இம்முறையும்!

பொங்குகிறோம் இம்முறையும்! புதிய பானை, புத்தரிசி, புதுப்பால், சற்கரை, தேன், நெய்யும், மங்கலமாய்க் கோலமும், தோரணமும், இஞ்சி மஞ்சள் மா இலை, பழங்கள், கொண்டு…மீண்டும் பொங்குகிறோம்! நீராடி, புனிதம் சூட்டி, பானையேற்றி, பால் பொங்கும் வரை தீ மூட்டி,

Posted in கவிதைகள் | Comments Off on பொங்குகிறோம் இம்முறையும்!

தமிழ், சைவம் காத்த பெண்மை

‘ சிவத்தமிழ்ச் செல்வி’ என்று திசையெட்டும் அழைக்கும் அன்னை. தவப்பெரு வாழ்வு வாழ்ந்து தமிழ்,சைவம் காத்த பெண்மை. எவர்க்கும்…ஈடில்லாத் தாய்மை. இரும்புப் பெண்ணான தூய்மை.

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ், சைவம் காத்த பெண்மை

கணிக்க முடியாது.

கணிக்க முடியவில்லை… காற்று புயலாவதனை. கணிக்க முடியவில்லை… கனமழை தொடர்வதனை. கணிக்க முடியவில்லை… காற்றழுத்தத் தின்திசையை.

Posted in கவிதைகள் | Comments Off on கணிக்க முடியாது.

அமைதிப்புயல் ஃபெங்கால்

“அடக்கமுடையார் அறிவிலர் என்று கருதிக் கடக்கக் கருத வேண்டாம்” இக் கருத்தை வலியுறுத்த இப் ஃபெங்காலை

Posted in கவிதைகள் | Comments Off on அமைதிப்புயல் ஃபெங்கால்

இன்றைய ஜனநாயகம்?

பாராளு மன்றைத் தெரிய பழுதில்லாத் தேர்தல் நடந்தது. தேர்தலிலே போட்டியிட்டோர் ஆர்வம் அளப்பெரிது. ‘இருநூற்றிருபத்தைந்து’

Posted in கவிதைகள் | Comments Off on இன்றைய ஜனநாயகம்?

புயலடிக்கப் போகிறதாம்…

புயலடிக்கப் போகிறதாம். புரட்டிற்று அறிவிப்பு! புயலடித்தல் நிச்சயம். புயலெந்த வழியில் ‘கரை கடக்குமெனக்’ கணித்தல் கடினம். “என்னவும்

Posted in கவிதைகள் | Comments Off on புயலடிக்கப் போகிறதாம்…