Category Archives: கவிதைகள்

காக்க முயன்றால்…

கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்…

கலியுகம்

நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும் நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம். நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு நித்தம் துயரம் சுமந்திருப்போம். போதனை வேறு, நடைமுறை வேறெனும் பொய்மை உலகினில் தான் அலைவோம்.

Posted in கவிதைகள் | Comments Off on கலியுகம்

என்ன நடந்தது ஈற்றில்?

தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம் செய்வோர், அடாவடியாய் முயல்வோர், தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால் ‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர், ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின் உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர்,

Posted in கவிதைகள் | Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?

கோடைத் தகிப்பு

நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே, சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே, வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே, வேர்வை நதிகள் விரைந்து மேனி மேடுபள்ளத் தூடு பெருக்கெடுத்து

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

ஈற்றில் என்ன ஆகும்?

மூண்டுஎழும் மோதல்களில் மூச்சிழந்து யாரெவர்…மண் மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம் முக்கி உசிரூசலாட வாழ்ந்தார்?

Posted in கவிதைகள் | Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?

வெற்றிடம் தானோ விளையும்?

வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர் மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள் மறைவர்; இடுகாடு சூழும். -இந்த ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள் இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ எமனுக்குத் தானே கொண் டாட்டம்!

Posted in கவிதைகள் | Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?

மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள். போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள். பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய பலரையும் தேடித் தின்றது ஏவு கணை. பாடு பட்டவர், பகலிர வாகத் தம் பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி,

Posted in கவிதைகள் | Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள். எங்கெங்கும் சிதைவுகள். எங்கும் புகைமூட்டம். எங்கெங்கும் தீப்பரவல். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்… பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள்.

Posted in கவிதைகள் | Comments Off on நரகமாகும் நகர்கள்.

நடு நிலைமை

வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும் அதை ஏற்றும் நூலினையும் அறுத்துவிட்டு நோண்டுது ‘நிகழ்காலம்’. என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்? இடர்க்காற்றில்,

Posted in கவிதைகள் | Comments Off on நடு நிலைமை

தமிழ் வாகை சூடும்.

எங்கள் தமிழின் மகிமை; – அதன் இனிமை, கனிவு, அருமை, பெருமை; எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன் இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும் மங்காது பழமையும் காக்கும் – குணம்; வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு;

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ் வாகை சூடும்.

எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது விளைவென்ன தருமென்று இனமிருக்கும். முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும் முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும்.

Posted in கவிதைகள் | Comments Off on எவரிருப்பார்?

வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக் கண்டறிய முடியாத வாழ்வினிலே… மோதி அடிபட்டு, ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும் அவா… குறையாப்

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் யதார்த்தம்.

வலியது விதி

எப்படித்தான் எமைப்பாது காத்த போதும் எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத் தப்பிவிட முடியாது; தருணம் வந்தால் சரியாக நமைக்காத்தே நடந்த போதும்… எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு

Posted in கவிதைகள் | Comments Off on வலியது விதி

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே மென்மை மிகு நேசம், கருணை, ஜீவ காருண்யம், தீயவை சிந்திக்காச் சிந்தை, பிறர்க்கேதும் தீங்கு விளைவிக்காச் செயல்கள்,

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே… காலத்தின் காற்றுந்தன் பக்கம் அடிக்கையிலே… காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே… காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே… இந்தக் கணம், அடுத்த கணம்,

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்