தங்கப் பொழுது

கண்களில் கோடி கனவு மிதக்கக்
களித்தது அந்நாளே -எங்கள்
காதல் மடியினில் கன்றுகளாகக்
கலந்தது அந்நாளே -புதுப்
பண்வகை பாடி பல விளையாட்டுப்
பயின்றது அந்நாளே -உயிர்ப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் குரல்

காலத்தி னுக்குக் கருணை சிறிதுமில்லை!
வேத நிபுணனையும்,
வீர மறவனையும்,
கோடி திருவின் மேல் குடியிருக்கும்
குபேரனையும்,
ஆளும் அரசனையும், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எம்மை இன்றேன் கதறவைத்தாய்?

“எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டான்”
எப்படி நடந்ததிது?
இது போகும் வயதல்ல!
இருக்கும் இடமெல்லாம் எமைச்சிரிக்க
வைத்தவனே!
மருந்தாய்ச் சிரிப்பருளி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனிதம் என்று மீள்வது?

இப்படியோர் காலம் மீண்டும் எழுந்ததிங்கு!
துப்பாக்கி பூபாளம் பாடிய
துயர் நாளில்
கூடித் திடீரென்று குண்டுவிழும்.
வேட்டதிரும்.
சாவரக்கன் ஆட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எம் மண் இதம்

காற்றினில் ஏறியே கவிதைகள் சொன்னோம்.
கடலதன் ஆழமும் நீளமும் கண்டோம்.
ஊற்றுநீர்ச் சுவையில் அமுதம் உருசித்தோம்.
ஊர் வயல் வெளியிலும் உயிரைத் தொலைத்தோம்.
சேற்றிலும் செல்வம் செழிப்ப தறிந்தோம்.
திசையெலாம் சொர்க்கம் சிரிப்ப துணர்ந்தோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மகிழ்வு?

நிலவின் ஒளியில் நெடுநேரம் குளித்து
அழகிரவு நனையும்
அகாலப் பொழுது இது!
பாலால் அபிஷேகப் பாணியிலே
பெளர்ணமியின்
பாலில் அயலும் பரவசமாய் முழுகிடுது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பை முடக்கும் எமன்

கண்கள் அறிந்திடாச் சின்ன உயிர் எமைக்
கட்டி அவிழ்த்து நிற்கும்- எங்கும்
காற்றாய்க் கலந்திருக்கும்- முகம்
தன்னில் முகமூடி போட வைக்கும் கரம்
தழுவவே தொற்றி ஏய்க்கும்- எங்கள்
தலையைக் குறியும் வைக்கும்! Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

பசி

இரவைக் கடுங்கோப்பி என்று பருகுகிறேன்!
எரியும் பகலைச்
சுடுபாலாய்க் குடிக்கின்றேன்!
நட்சத் திரங் கள்யான்
பானங்ககளில் கலக்கும்
கற்கண்டு; Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கால அலைகரைக்காக் கற்பெயர்கள்

அலைகள்…
கரையில் அமிழ்ந்த காலடித்தடத்தை
அழித்துவிட்டுப் போவதுபோல்…
அனுதினமும் காலத்தின்
அலைகள்…
புவியில் அமிழ்ந்த உயிர்களின் தடத்தை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிலையாமை

யார்வயிற்றில் யார்பிறப்பார் யாரு கண்டது? -அதை
யார் முடிவு செய்தவர்கள் யார் உரைப்பது?
பேய் வயிறோ நாய் வயிறோ யார் உணர்வது? -வந்த
பின் அழுது என்ன பயன்…யார் நினைத்தது? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சொல் நன்றி

இத்தனைபேர் வாழ்த்தி நிற்க
என்ன தவம் புரிந்தேன்?
இத்தனை பேரின் நேசம்
பெற எதை யான் செய்துவிட்டேன்?
இத்தனை பேர் போற்றினரே…
எக் கைமாறு செய்வேன்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முகிலாகுமா மனது?

மலைகளில்..முகில்கள் வந்து
குந்தி இளைப்பாறி
களைதீர்க்கக் கண்டுள்ளேன்!
கைகளுள் கரைந்து போகும்
இவைகளை…இவற்றின் இயல்பை…
பரவுகிற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சொர்க்கம் நரகம்?

சொர்க்கலோகம் என்ற ஒன்று பூமி தாண்டி இல்லையே!
சூழும் நரக லோகம் கூட தூர எங்கும் இல்லையே!
சொர்க்கலோகம் சென்று வந்தோர் சொன்னதேதும் இல்லையே!
துயர நரக லோகம் சென்று மீண்டோர் சொல்வதில்லையே! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர் வாழ்வு

காற்றடித் தணைக்க கடும் முயற்சி செய்ய…தனை
ஏற்றத் துடிக்கும் விரல்களுக்கு
துரோகமற்று
எண்ணை உண்ட திரியில்
எப்படியும் பற்றி மூளும்
சின்னச் சுடர்போல்…சிரமம் தான் நம் வாழ்வு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நஞ்சூறிய காலம்

நஞ்சூறிக் கிடக்கிறது நமதுணவு!
இன்றைக்கும்
நஞ்சூறிக் கிடக்கிறது நாங்கள் குடிக்கும் நீர்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமது மருந்துகள்!
நஞ்சூறிக் கிடக்கிறது நமதுநிலம்!
இன்றெங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment