நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது…
எதை எவர்தான் தீண்டினாலும்
தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது!
யார்மேல் யார் பட்டாலும்
தொற்று நீக்கி தெளித்து
பேதமின்றிக் கைகூப்பும் பெருமை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவதிப் புள்ளி

பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்!
பாவத்தின் கூலி மரணம்
எனும் மறைநூலும்!
பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு?
பாவங்கள் யாவுக்கும்
மரணமா பதிலிங்கு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அமுதன்

அமுதம் இருக்கிறது….
அதை நீ மலமென்றாய்!
அமுதம் அரிதான பொருள்;
எவரெவர்க்கும்
அமுதம் பெரிதான அருள்;
ஆம் அயலுயிர்க்கு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இருளைச் சுடும் ஒளி

தீமை இருள் துரத்தி – பல
தீப வரிசை நிரலைப் பரப்பி…நற்
சாம ம் வரை கொழுத்தி – ஒளி
சாலைகள் வீடுகள் எங்கும் சுவறி..ஓர்
கோலம் இட அடுக்கி – மனம்
குளிரும் வரை திருக் கார்த்திகை நாளிலே Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

புயற் ‘புரவி’

எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி?
எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்?
எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை?
எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெல்வோம்

ஏனடா இந்நிலை? இந்த உலகுக்கு
இன்று நோய் சூழ்ந்த வாழ்வு.
எப்படி வந்தது? எப்பழி தந்தது?
எங்கும் இறப்பின் சூழ்வு.
வான்புகழ் கொண்ட நம் வாசலைப் பூட்டிற்று
மற்றோனைத் தீண்டின் தொற்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்டெடு

தேசம் அன்றைக்கு தீயிடை வீழ்ந்தது.
திக்கு எட்டைத் தீ தின்று குடித்தது.
வாசம் வீசும் மலர் தென்றல் இரத்தத்தின்
வாடை கொண்டெழக் குண்டுகள் பிய்த்தது.
மோசம் போனவர் இலட்சம்…ஈற்றினில்
முடிந்து மாண்டது மானுடத்தின் கொற்றம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சூரர் காதை

பாவமென்பதை யாருரைத்தனர்?
பாவம் கோடி நீ செய்தனை!
பண்பு என்பதை யாவர் சொல்லினர்?
பாதகங்கள் நீ பண்ணினை!
தேவை தீர்த்திட யாது செய்யினும்
தெய்வம் என்சொலும் என்றனை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன்

பொய்கள் உரைப்போரே அஞ்சாமற் போகையிலே
மெய்யை உரைக்க ஏன்
மெய், அஞ்சித் துஞ்சவேண்டும்?
பொய்யன் திமிரோடு புவியிற் திரிகையிலே
மெய்யன் ஏன் அஞ்சி அடங்கி
ஒடுங்கவேண்டும்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எது மிஞ்சும்

ஆயிரம் ஓவியம் ஆண்டவன் தீட்டிட
அற்புதத்தால் சுழல் பூமி
ஆயினும் சாவதும் அண்டிடும் நோய்களும்
ஆழுதேன் துன்பமும் சாமி?
காய்களும் வெம்பல் கனிகளும் காலத்தின்
கைகளுள் சிக்குதே காண் நீ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காத்துக் கிடக்கின்றேன்

கனவென்ற அன்னை நனவென்ற தந்தை
கலந்தாட வந்த சிறுவாழ்வு
கதையாகு மாமோ கவியாகு மாமோ
கதி என்ன நாளை? பதில்கூறு!
மனமென்ற மாயம் மடைதாண்டி ஓடும்
வழி தேடிப் போகத் தெரியாது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேடி வரம்கேட்போம் !

ஆயிரமாய் நல்ல அருங்கலைகள் பூமியெங்கும்
ஓயா துயிர்க்க உடல்தந்து –தாயான
தேவி கலைமகளே… தேர்ந்து திறண் தந்து
சாவி கொடுத்தியக்கு சார்ந்து! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தூண்டி

என் தனித்த வரண்ட வானின்
எல்லை தொடும் ஓர்பறவை…
என் மன வானத்தில்
எண்ணற்ற கவிப்பறவை
தன்னை உயிர்க்கவைத்து
தடை தாண்டிப் பறக்க விட்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கொரோனாக் காலம்

கொலையாலே உலகாளும் கொரோனா காலம்.
கூடி ‘பத்து இலட்சம்’ தாண்டி மரணம் நீளும்.
பல ‘வல்ல அரசுகளே’ பதறிச் சோரும்.
பாரதத்தில் பாதிப்பின் எல்லை மீறும்.
உலகின் தலை மகன் ‘Trump’ ம் மனையும் நேற்று
உற்றனராம் நோய்த்தாக்கம்…கூர்ந்து பார்த்தால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எழுக!

கண்களில் நீர் நதி வற்றிடா தோடிடும்
காலம் தொடருது எதனால்?
கடைக்கண்ணும் காட்டாக் கடவுளர்…கோவில்-
களில் உறங்கும் நிலை எதனால்?
புண்களும் ஆறாப் பொழுது தொடருதே
புழுத்திடும் நாளை பார் அதனால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment