புவியென நிதானம் கொள்!

மாற்றங்கள் கொள்ள வேண்டும்
மனதை ஓர் முகப்படுத்தி
ஆற்றிலே நீர் போல் உள்ளம்
அலைவதை நிறுத்திப் பாயும்
காற்றென எண்ணம் ஆடிக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காகிதக் கப்பலேறிகள்

இத்தனைக்கும் பின்னரும் இன்று புறப்பட்ட
ஒற்றைப் படகை
உயிருடனே மீட்டார்கள்!
உயிரிழந்து போன… உடைந்து சிதைந்துபோன
உருக்குலைந்து எந்தக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு துளி விசப்பொய்

நாங்கள் உரைத்த ஒரேயொரு பொய்யினது
வேசம் தெரியவர….
இதுவரைநாம் சொல்லிவைத்த
உண்மைகளிற் சந்தேகம் உலகுக்கு ஏற்பட்டு
போலியாய் நாங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்னும் பறக்குமா இப்பறவை?

இந்தப்பறவை இன்னுமின்னும் பறக்க
சிறகை விரிக்கிறது
சிறிதும் களைப்பின்றி!
இவ்வளவு தூரம் பறந்து
இளைப்பாறி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழவழியுண்டு

அழியாத ஆசை அலைமீறும் வேளை
அதிர்வூற நெஞ்சக் கடல் ஆடும்.
அஹிம்சை துறந்து அலைபோல் கிளர்ந்து
அடங்காத போரில் உடல்சீறும்.
வழியற்று… ஆசை தனைத்தீர்க்கத் தோற்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நான் யார்?

“நல்லவனா கெட்டவனா நான்” என
மனச்சாட்சி
மெல்ல என் முன் நின்று
எனைக் கேள்வி கேட்டபோது…
“நல்லவனா கெட்டவனா நான்” Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முதியோர் வாழ்கென ஊதடா சங்கினை

வாழ்வின் யௌவனப் பருவங்களைத் தாண்டி
வயதுப் புரவிகள் ஓடி இளைத்திட,
நாடி தளர்ந்து நரைதிரை தோன்றியே
நடக்க இன்னொரு காற்துணை தேடிட,
வேடம் போட்டும், கருமையைத் தீட்டியும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலப்புதிர்

வானம் போடும் கோலங்களை யாரறியக்கூடும்?
வாழ்க்கை போடும் வேசங்களை யாருரைக்கக் கூடும்?
நீரின் மேலே குமிழிபோhலே தானே வாழ்க்கை ஓடும்!
நேரம் எந்த நேரம் உடையும் கூறிடாது காலம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்ச்சவால்

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை.
மானுடர்க்கு மட்டுமில்லை…
ஓரறிவில் இருந்து
ஐந்தறிவு ஆறறிவு அனைத்துக்கும்
கூர்ந்து பார்த்தால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அழியாத உயிர்ப்பு

சிற்றிறகு விரிக்கத் துடித்திடும்
சிறிய சீவனின் கீச்சுக்கீச்சுக் குரல்
பற்றை தாண்டி நிமிர்ந்த மரப்பொந்தின்
பக்கம் கேட்டது கண்ணில் மருட்சியும்
சுற்றியே துணை அற்ற வெருட்சியும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மை மயக்கம்

விண்மீனா? கோளா?விளங்காமல் பார்த்திருந்தேன்!
மின்னிவிண் மீன் போன்றும்
மின்னாமற் கோள் போன்றும்
என்னையே ஏய்த்து இருக்கிறதவ் ஒளிப்புள்ளி!
எட்ட இருந்ததனால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கண்ணீரின் காரணம்

நண்பா நினது இருவிழிப் படகுகளும்
கண்ணீரில் ஆடிக்
கிடந்தன நெடுநேரம்!
இடைக்கிடை இமையின்
அணையுடைத்துத் துளிகசிந்து Continue reading

Posted in நிகழ்வுகள் | 1 Comment

ஒரு நொடியே போதும் வரலாறு மாறிப்போம்

அடுத்த ஒரு நொடியில் ஆருயிர் பிரிந்திடலாம்,
அடுத்த கணத்துளெல்லாம்
தலை கீழாய் மாறிடலாம்,
என உணராப்பேதையர்கள்
‘எல்லாமும் சாதிப்போம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் கவிதை

நானோ நினைக்கின்றேன் இதுதான் கவிதையென்று.
நீயோ நினைக்கின்றாய்
அதுதான் கவிதையென்று.
அவனோ உரைக்கின்றான்
வேறொன்று கவிதையென்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வதைகளுக்கு எதிராயிரு

வதைபுரிபவர் வாழ்வதும் ஏனடா?
வதைகள் செய்பவர் வெல்வதெவ்வாறடா?
வதைகள் என்பவை ஆயுதம் ஏந்தியே
வாட்டி அறுத்துக் கிழித்தலென்றில்லைகாண்!
வதைகள் என்பவை வார்த்தையால் நேரலாம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment