நிலமெனும் நல்லாளுக்கு…..

பட்டாடை கட்டிப் பழ இதழில் தேன்பூசி
நெற்றித் திலகமிட்டு நெய் தடவி
குழல் வனத்தில்
செவ்வந்தி சூடித் திருத்தாலி நகை மினுக்கி
என்றெழுவாய் எங்கள் ‘நிலத்தாதயே’? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆச்சி: நீ கொடுத்து வைத்தவள்!

வண்டியில் நாங்கள் அன்று
வரிசையாய் நடந்த காட்சி
கன்னியா ஊற்றில் உள்ளக்
குளிர்கெட… உலர்ந்த மாட்சி
கண்டியின் தென்றலோடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உங்களால் ஆகும்

அலையாடிய வீதியில் மானுடமோ
அடிமாடெனச் சாகிறதே!
ஆழிவாடிய போதிலும் ஆட்சிநெறி
அருள் நல்க மறந்திடுதே!
முலையால் அனல் மூட்டிய கண்ணகிகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு

என் வீட்டின் ஜன்னல்கள் இன்று திறந்திடுமா
என்பதனை வெயிலொளியும்
காற்றும் மழைபனியும்
தீர்மானஞ் செய்வதனை தேர்ந்தேன் நான் இன்று என்
ஜன்னல்கள் இவற்றோடு தானுறவா? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புல்லாய் கசங்கிய நான்!

தர்மமும் நியாயமும் தொலைந்து
தலைகுனிந்து
நிற்கின்ற மண்ணில்
நிமிர்ந்தோங்கும் பொய்களது
காலடிக்குள் புல்லாய்க் கசங்கிக் கிடக்கின்றேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தர்மமாய்ச் சேர்ந்த தனம்

காய்ந்து அனற் சூளையில்
சுடுபட்ட மட்பாண்டம்
நீர் ஒழுகச் செய்யாதே!
நீ தரும வழிநின்றால்
காய்ந்து வறுபடுவாய் துயர அனற் சூழையிலே! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுவைப்போம் பொங்கல்

ஏர்நுனியை எழுத்தாணிஆக்கி…வேர்வை
தொட்டுப் பண்பட்டநன் நிலமாம் தாளில்
ஏர் ‘எழுதுவினைஞன்’ நிதம் எழுதிச் செல்ல
எழுந்ததடா பசுமைநெற் கவிவயல்கள்!
வேர்நுனிகள் மழைத்துளியை ருசிக்கக் கண்முன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தலைகீழ் நியாயங்கள்

கோவிலிலே வைத்துக் கும்பிடப்படும் பொருளாய்
போற்றவே பட்ட
பல புனிதத் தியாயங்கள்
தீட்டுப் பொருட்களாக திசையில் சிதறினவாம்
விலைபேச முடியாத Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீர்ப்பாம்பு

நெளிந்தோடும் பாம்பாய்
நிலத்திலாறு அசைகிறது!
சலசலத்து….ஏதேதோ திரவியங்கள் தினம் கலந்த
கலவையென ஆறு
கரைபுரண்டு ஓடிடுது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொட்டாற் சுருங்கி

தொட்டாற் சுருங்கி தொட,
இலைகள் தாம் சுருங்கிச்
சட்டென உடைந்து தனை ஒடுக்கி அடங்கிவிடும்!
மீண்டும் தொடுகை விலகியபின்
ஏதுமொன்றுஞ்
சீண்டாக் கணத்தில் சிலர்த்து இயல்பாகும்!
இயல்பில்… இதனில் இயல்பில்…
எக்கணமும்
செயற்கையான தூண்டலொன்று
சேதம் விளைவிக்கும்!
என்வாசஸ் தலத்தில் எழுந்துநின்ற
இதன் ஒரு
அங்கத் தவளின்முன் அமர்ந்து
தொடுவதுவும்
அதுசுருங்க இரசிப்பதுவும்… இலைவிரிய மீண்டும்மீண்டும்
தொடுவதுமாய்ப் பொழுதைக் கழித்தேன்!
சிறு கன்று
சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்தயர்ந்து
சலித்தபோது…. அதனின்
சமநிலை இயல்பு கூட
எவ்வளவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து
வாழ்ந்துள்ளது
எனக்கண்டு ‘பாவமெனச்’ சீண்டாது
விலகிவந்தேன்!
என்னைப்போல் எல்லோரும்
இளகிய மனம்படைத்தோர்
அல்லவே…
அவர்கள் இதனியல்பை அறிந்தவர்கள்
ஒவ்வொரு வராக இதைச்சீண்டி இரசிப்பார்கள்!
தொட்டாற் சுருங்குவதேதனித்துவ
இயல்பாக
வாழுமிது உண்மை ஆபத்தைப்….
பொய்யான
தூண்டலினை…. இனங்காண முடியாமல்
மிகநொந்து
எதற்கு எடுத்தாலும் சுருங்குவதை மாற்றுகிற…,
மெய்பொய் உணர்ந்து
சுருங்கி விரிகின்ற….,
வரமொன்று கேட்டுத் தவமொன்றியற்றுகிறேன்!

“மனதும் தொட்டாற் சுருங்கிதானே”
எனும்வரிகள்
அசரீரி போல்கேட்கும்..
தவத்தில் இலயிக்கின்றேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

யார் நீங்கள்?

யார் தான் நீங்கள்?
யாவர் தான் நீங்கள்?

ஆம் புதிய நாடகத்தின் பாத்திரங்கள் நீவிரென்றார்.
ஆம் புதிய நாயகர்கள் என உங்கள் முகமுரைத்தார.
நாடகமா? யதார்த்தமா? நாமறியோம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இருளைப்படைத்தல்

இருளைப்படைக்க இயலுமா தோழர்களே?
இருளைப் படைத்தல்
இலகுவா நண்பர்களே?
இருளைப் படைக்க இயலாது
நிறைந்திருக்கும் Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

நிரந்தரம்

கண்முன் உங்கள் முகமே தெரியுது
கண்ணை மூடின் உம்முகம் வந்து போகுது!
சின்ன மாற்றமும் இன்றித் துயில்வதாய்
சிரிப்பில் பூத்த பூ வாடா திருந்திட
ஒன்றும் நடவாத மாதிரி…. உம்முகம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அக்கினியும் வர்ணனும்!

தேவதை ஒன்றுவரும் – எங்கள்
தெருக்களில் பொன்மழை தூவிவிடும்!
காவியம் நூல்வகைகள் – எங்கள்
கண்முன் அரங்கேறி ஆர்த்து எழும்!
சாவினுக் கஞ்சுநிலை – சாய்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மையின் மகிமை!

சிரித்தபடி இரசித்தபடி எங்கள் மீது
தினம்அபாண்டப் பழிபோட்டு பொய்கள் நூறை
திரித்து எம்மை இழிவு செய்து ஊரே பார்க்கத்
திசைகளெங்கும் அவதூறு முரசறைந்தீர்!
மருமமாக அவைதிரண்டெம் கீர்த்தி சாய்க்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment