Category Archives: கவிதைகள்

“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ, உன் கரத்தின் தடி பொல்லோ, அன்றவனைச் சாய்க்க… அள்ளி எடுத்துவந்து; மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால் ஈரஞ் சுவறி இருந்த சுடலை மண்ணில், மைம்மற் பொழுதில், மண்வெட்டியால் மேலால் சும்மா கிளறி நட்டாய்! சூழ மனிதரற்ற நாட்களில் பேய்களே நடமாட… பிணங்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து குவிய… நீயும் உன்னோடு … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று

மங்கிடாப் புகழாளன்.

எங்களின் குருவாயும், “இது திசை” என்று ரைத்த ‘கலங்கரை’ யாகவும், சங்கை மிக்க ‘யாழ் இந்து’ ஆசான்களில் தனித்தொளிர்ந்த ‘பிதாமக னாகவும்’, சிங்கமாகக் கால் பழுதுபட் டாலும்… உள்ச் சீற்றம் குறையாது ‘வாழ்ந்து… உயர்ந்த’ நம் ‘மங்கிடாப் புகழாளன்’ ‘சிவராம- லிங்கம்’ மாஸ்ரரை.. நெஞ்சால் வணங்குவோம்! கற்ற கல்வியால் பெற்ற கம்பீரமும், கலை மொழி தேர்ந்து … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மங்கிடாப் புகழாளன்.

பாடம்

ஏறெடுத்துப் பார்க்க எவருமற்று அன்றொருகால் பாரதி தன்னுடைய ‘பாட்டைத்’ தினமெழுதிக் குவித்த படியிருந்தான்! கொடு வறுமை துரத்திவிட,

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

ஆற்றங்கரை யோரம் ‘நர சமுத்திரம்’ திரண்டது. அதன் அலைகளாய் சனத் தலைகளே அசைந்தது. ஊற்றுப் பொங்கி ‘சந்நிதியில்’ அருள் மழை பொழிந்தது. ஊர்களே திரண்டு தேரைக் கண்டு அதில் நனைந்தது.

Posted in கவிதைகள் | Comments Off on ‘அன்னதானக் கந்தன்’ அற்புதம்

சந்நிதிப் பாதை

புதிய உலகம் பொருள்பின் அலையும்; பொருளற் றெளிய பொருள்தன்னை புகழும்; புளுகிப் புரளும்; அதனில் பொடியின் அளவே நிதமொட்டும்! இதனைப் பலரும் புரிவ திலையே, இதயக் கருணை யுடன் யார்க்கும்

Posted in கவிதைகள் | Comments Off on சந்நிதிப் பாதை

கனவுக் கவி !

கவிதை என்பது கனவு போன்றது! கனவு ஆயிரம் கவின் அருள்வது, எவரின் ஏக்கமும் தணிய வைப்பது, இடிகள் தம்மையும் பொடிகள் செய்வது, தவிக்கும் வாய்களில் அமுதருள்வது, தடைகள் யாவையும் தகர வைப்பது,

Posted in கவிதைகள் | Comments Off on கனவுக் கவி !

பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத், துன்பம் சுமந்து தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப், பார்த்துச் சிலிர்த்தருள்வான்… பார்போற்றும் நல்லூரான்!

Posted in கவிதைகள் | Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

திரு நல்லை.

யாழின் தனித்துவம். யாழின் பெருமையம்சம். யாழின் திமிர், கர்வம். யாழ் மரபின் குறியீடு. யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின் அடையாளம்.

Posted in கவிதைகள் | Comments Off on திரு நல்லை.

வென்று எழ வை!

ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா? ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா? ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா? அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா? வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா? வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா?

Posted in கவிதைகள் | Comments Off on வென்று எழ வை!

உன்னை விட மாட்டோம்.

நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே! மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே! சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம் தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும்.

Posted in கவிதைகள் | Comments Off on உன்னை விட மாட்டோம்.

தமிழின் தலைவன் முருகன்

(தனன தனன தனன தனன தனன தனன தன தான….சந்தம்) எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’; இரவும் பகலும் அதைநானும்… எழுதி உலகும் வியக்கும் வகையில்

Posted in கவிதைகள் | Comments Off on தமிழின் தலைவன் முருகன்

மாம்பழமும் வேட்டையும்

நாளும் ஒவ்வொரு விதமாய் நடக்கும் திருவிழா -திரு நல்லையிலே நித்தம் புதிய சேதி சொல் உலா! காலையிலே மாம்பழத்திற் காக மோதினான் – அண்ணன் கணபதியும் கனியைக் கொள்ள பழநி ஏகினான். ஆண்டிக் கோலத்தோடு வேலன் வாடியேங்கினான் – அந்த அரிய கனியினாலே என்ன ஞானம் சொல்கிறான்?

Posted in கவிதைகள் | Comments Off on மாம்பழமும் வேட்டையும்

உள்ளப் பனிக்கட்டி உருகி…

உள்ளப் பனிக்கட்டி உருகிக் கரைந்துவரும் வெள்ளம் இருகண்ணால் வழிந்து விழுந்தோட நிற்கின்றோம்; நின்றன் நிஜஎழிலைக் கண்டு…வீதி சுற்றி வருகையிலே

Posted in கவிதைகள் | Comments Off on உள்ளப் பனிக்கட்டி உருகி…

அவன் செயல்

‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து எங்களது ‘பிணிப்- பணிகள்’ தம்மை பிய்த்துக் குதறிடுது ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’! நம்…புரியா

Posted in கவிதைகள் | Comments Off on அவன் செயல்

கார்த்திகை நாளினில் கதி நீயே!

“தந்தனத் தானன தன தான” மெட்டு நல்லையின் கோபுரம் வரவேற்க நாதமும் வேதமும் உயிரூட்ட பல்வகை வாத்தியம் இசைமீட்ட பாரடா கண்கள் எம் இடரோட்ட!

Posted in கவிதைகள் | Comments Off on கார்த்திகை நாளினில் கதி நீயே!