நிலை

சோத்துக்கு வழியில்லை. சோதனைக்கு முடிவில்லை.
சோத்தியாய்த்தான் நாடு…ஆனால்
சோடனைக்குக் குறைவில்லை.

தலையில் முடியில்லை.
வளர வழிகளில்லை.
விலைமிகுந்த கொண்டையுடன்
வேசத்திற் களவில்லை.

மாத்துடுப்பு ஏதுமில்லை.
வருமானம் போதவில்லை.
கூத்தாட்டம் பார்க்கக் கூட்டம் குறையுதில்லை.

எடுப்பதுவோ பிச்சை, எண்திசையும் தண்டல்…ஆனால்
படலைகளில் பந்தல்.
பாயாசம் கடன்பணத்தில்.

நேற்று நடந்ததெது? நீறியோர்கள் ஏன் போனார்?
ஏற்பட்ட வெற்றிடங்கள் எவை?
யார்க்கும் கவலையில்லை.

எவரை விழுங்குவது?
எவரிடத்தில் பிடுங்குவது?
எவரை விற்று வாழுவது?
என்பதிலே போட்டி நூறு.

வாழ வழிதேடி, மகிழ வரம் நாடி,
ஆளும் முறைபாடி,
அசையலை நம் மனம் கூடி!

Posted in கவிதைகள் | Comments Off on நிலை

மர(ன)ம்

மரம் தனது அன்பை
அயலிலுள்ள உயிர்களுக்குத்
தருகிறது… பூக்கள், காய்கள்,
பழம் விதையாய்;
இதநிழலாய்;
கிளைகள் இலைகள் அசையவரும்
காற்றாய்;
கமழுகிற பூமணமாய்;
இனிமைமிகு
தேனாய்;
பட்டைகளில் பூச்சி புழு தங்க
இருப்பிடமாய்;
நாங்கள் மனிதர் இதன்மீது
இருக்கும்நம் அன்பை
எப்போதும் காட்டினோமா?
இரக்கமேதும் கொண்டோமா? இல்லை…”அதில் என்ன
பிடுங்கிடலாம் இலாபம்”
என அதனின் நிழலடியில்
அமர்ந்தபடி யோசிப்போம்!
அப்பொழுதும் அதுநல்கும்
பழம் காயை எடுத்துண்போம்!
சுவைப்போம்!
பசிதணிப்போம்!

Posted in கவிதைகள் | Comments Off on மர(ன)ம்

மெய்

மெய்யென்று சொன்னது பொய்யாகிப் போனதே
மேனியைத் தீ தின்றதே!
மீட்டிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுதே
மெய்யுடல் இன்றில்லையே!
ஐயகோ எத்தனை அழகு புனைந்தனம்
அடிக்கடி குளிப்பாட்டியே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

எதார்த்தக் கவிதை எழுது!

கண்களில் ஆயிரம் கனவு ததும்பக்
கவிதை எழுதடா கவிஞா!
காலத்தை வென்றிடும் கற்பனை கூட்டி நற்
கருத்தை விதையடா கவிஞா!
புண்களை மாற்றிடும் பொது மருந்தொன்றையே
பூசடா கவிதையாய்ப் புலவா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எதார்த்தக் கவிதை எழுது!

புனல் வாதம்

சற்று ஓய்ந்து கிடந்து…மறுபடி
சாரை சாரையாய்க் கொட்டும் மழை! நிலம்
முற்றாய் ஊறிச் சிதம்பி நிரம்பியே
மூழ்கிற்று; வீடு, வயல்கள்,தெரு,குளம்
வற்றாக் கிணறுகள் யாவும் நிறைந்தது.
மனங்களும் ஈரஞ் சுவறி நடுங்குது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புனல் வாதம்

மீட்டிற்று

ஓர் ஐந்து மணித்துளிதான்…
உயிரிழந்து சடலமாகி
மாய்ந்தது மின்…இந்த வளத்திரு நாடெங்கும்!
இப்படி ஒருநிலமை,
தொழில்நுட்பச் சேதாரம்,
எப்பவும் நடந்ததுவோ முன் எங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மீட்டிற்று

இயற்கையொடு இழைதல்

எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
எதிர்வுகூறிப் பார்த்திருந்தோம்.
இதோவரும்…
இன்னும் இருமணியில்…
இரவினில்…
கொட்டும் மழையென்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கையொடு இழைதல்

விதி

வேட்டையாடுது வேட்டுகள் -குண்டு
விண்ணைப் பிய்த்துச் சிதைக்குது -அட
ஏட்டிக்குப் போட்டிப் பீரங்கி; -நிலம்
இறக்க உழுதன டாங்கிகள்; – கணைப்
போட்டி இரவும் தொடருது – சனம்
போக்கிடம் அற்று அலையுது – “எவர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விதி

பிராயச்சித்தம்

உண்மை அறம் நேர்மை – நெஞ்சில்
ஊற… இரக்கம் கருணை கரிசனை
கொண்டு தாழ்வுயர்வுதனை-தூக்கி
கொஞ்சாது யாவர்க்கும் நன்மை சமநீதி
எண்ணுவோர் இங்கு இல்லை -மக்கள்
எண்ணம் அறிந்து அவர்க்காய் உழைக்கிற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிராயச்சித்தம்

நிரந்தரம்

இரவு நிரந்தரம் இல்லை.
பகலுந்தான்
நிரந்தரம் இல்லை.
நிலவிரவு நிலைக்கவேண்டும்
என்று நினைத்தாலோ…
எழிற்பகலே நீளவேண்டும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிரந்தரம்

தடங்கள்

வானம் பொழிதல் வழமை;
ஆண்டாண்டாய்
மாரிகளில், சித்திரைச் சிறுமாரிக் காலத்தில்,
வானம் பொழிதல் வழமை;
வானமொரு
‘அட்சய பாத்திரமாய்’ அள்ளி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தடங்கள்

மனது பூக்கும் வாழ்வு.

காலை விடிகாலை காலும் பனியூறி
காற்றுஞ் சிலிர்ப்போடு நகரும்.
காதில் ‘திருவெம்பா’ கானம் விழும்போது
காய்ந்த மனங்கூடக் கரையும்.
சூழும் இருளுக்குள் தோன்றும் ஒளிதீபச்
சூடு உயிரெங்கும் பரவும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மனது பூக்கும் வாழ்வு.

நடுகை

மாரி இறங்கிவர, மண்ணும் இழகிவிட,
ஊரே குளிர்ந்து
ஒடுங்கிக் கிடக்க, நல்ல
நேரம் இதுவாக,
நெருப்புக் கோடை தணித்து…
வாற வருடம் மண்ணில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நடுகை

சுடர்

எல்லாம் எரிந்து இறுதிச் சாம்பல் எஞ்ச…
கொஞ்சம் அதைக்காற்றுக் கொண்டுபோக…
மழைகரைத்து
மிஞ்சியதில் பாதியினை
விரைந்து வெள்ளம் அகற்ற…
எரிந்த அடையாளம் ஏதுமற்று; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுடர்

வரலாற்றை எழுதுதல்

நேற்றைய கதைகள் நிமிர்ந்த எம் மனச்சுவரில்
ஏற்கனவே எழுதிவைக்கப் பட்டன;
வரலாறாய்
மாற்றிவிடப் பட்டன!
வலிந்தவற்றை இனித்திருத்த
முடியாது; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வரலாற்றை எழுதுதல்