அறிவோன்

இறைவன் அறிவான் எவன் பொய்யன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் மெய்யன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் அழுக்கன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் தூயன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் நண்பன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் பகைவன் என்பதனை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிவோன்

என் கவி(வி)தைகள்.

காலனைக் கண்டு நடுங்கிடும் -கதை
கவிஞன் எனக்கென்றும் இல்லையே-அவன்
ஓலம் இட்டோடித் தொலைந்திட -எந்தன்
ஊற்றுக் கவிதை உதவுமே -புது
வேல்களாய்ப் பாயும் வரிகள்முன்-எந்த
வில்லங்கம் துன்பந்தான் நிற்குமே?-உடல் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என் கவி(வி)தைகள்.

காவல்

தேரடியில் தேடி எமைச் சீண்டுகிற காற்றும்
தீர்த்தம் தரும் கேணியதன் தேனமுத ஊற்றும்
கோபுரம் நிமிர்ந்துகலங் கரை யெனவே ஆளும்
கூட்டி வரும்…’திக்குத் தெரியாத வரை’
நாளும்
ஆறு நிலைப் பூசை மணி ஓசை வரவேற்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காவல்

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும்
தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும்
வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும்
வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும்
நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய்.
நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

தணியாத தாகம்.

எல்லோரும் தம்மை ஏதோ ஒருவிதத்தில்
எல்லோர்க்கும் நிரூபிக்கும்
எத்தனத்தோ டியங்குகிறார்!
ஒருவர் எழுதுகிறார்.
இன்னொருவர் பாடுகிறார்.
ஒருவரோ ஆடுகிறார். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தணியாத தாகம்.

கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி
மண்ணில் விழுந்ததென
கானம் பிறந்ததடா -கனல்
கண்ணைப் பறித்ததடா
ஈனம் களைந்திடவே -எழும்
ஈடில் இசை அதனை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கேள்விச் செகிடர்.

வாழ்வைத் தொலைக்கும் வழி.

நிலத்தினடி நீர்தான் நிலைத்த வளமெமக்கும்!
நிலத்தடியில் எம் ஊரில்
தனித்துவமாய் நிற்கின்ற
சுண்ணக்கற் பாறைப் படுக்கைமேல்
வடிந்து தேங்கும்
தண்ணீர்தான் எம்வாழ்வின் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வைத் தொலைக்கும் வழி.

என்னதான் ஆகுமோ இங்கு?

வீதியெங்கிலும் தீமை சூழ்ந்தது.
வேதனைப் புதர் தான் வளர்ந்தது.
பேதமாயிரம் பூத்தெழுந்தது.
பிச்சல் பிடுங்கல்களே நிறைந்தது.
சோதனைகளும் சூழ்ந்துவந்தது.
சோறு தேடியே வாய்களோய்ந்தது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என்னதான் ஆகுமோ இங்கு?

ஆதரவு வார்த்தை.

ஆதரவு தேடி அலைகிறது பலமனங்கள்!
“யாரின் பரிவும்
தமக்குக் கிடைக்காதா?”
என்கின்ற ஏக்கத்தோ டியங்கும் பல் இதயங்கள்!
ஆதரவு வார்த்தை ஒளடதமாய்,
ஒத்தடமாய், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆதரவு வார்த்தை.

ஜெயம்

எனது விருப்பத்தை எனது கருத்துகளை
எனது சிந்தனையை
யான் பகிர முடியாதா?
எனது சுதந்திரத்தை
என் வாழ்வுரிமையினை
எனது தனித்துவத்தை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஜெயம்

காண் நிஜம் பொய்யும்!

காலன் வருகிற நாளு -எது
கண்டு முதலே தெரிந்தவர் யாரு?
சாவின் பின் போவதெவ் ஊரு? -அங்கு
தண்டனையோ விருந்தோ உனக்குண்டு?
ஆலம் அமுதமும் தின்று -எதை
யார் எங்கு என்று வெல்வார் தெரியாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காண் நிஜம் பொய்யும்!

காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது
கொடுங்காலம்.
கனவுகள் அடைகாக்கப் பட்டுக்
கவனமாக
“நனவுகளின் குஞ்சுகள்
நாளை பொரிக்குமென” Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலம்

நினைவுகளை மீட்டல்

நினைவுகள் சிலது கடல் நீரில்
மூழ்கினவாம்.
நினைவுகள் சில மாரி
மழையில் கரைந்ததடா.
நினைவுகள் சிலது
நெருப்பில் பொசுங்கியதா? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நினைவுகளை மீட்டல்

கனவின் சிறகுகள்

சிறகுகட்டி எங்கெங்கோ சென்று வரும் கனவு!
வெறும் காலால் மட்டும்
இவ்வளவு வேகமாக
வெவ்வேறு திசைகட்கு விரைந்தேக முடியாது!
அவ்வளவு வேகமாக
அடுத்த அடுத்த நொடி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவின் சிறகுகள்

கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி
மண்ணில் விழுந்ததென
கானம் பிறந்ததடா -கனல்
கண்ணைப் பறித்ததடா
ஈனம் களைந்திடவே -எழும்
ஈடில் இசை அதனை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கேள்விச் செகிடர்.