Category Archives: கவிதைகள்

கடன்

கடன்பெற்றுப்பசிபோக்கலாம்-பட்ட கடன்தீர்க்ககடன்கேட்டும் பொழுதோட்டலாம். கடன்பட்டுக்கலியாணமும்-கட்டிக் கடனோடுபதினாறும்பெறக்கூடலாம். கடன்தீர்க்கும்வழிமறந்து-நாளை கடன்தீர்ப்பான்பிறனென்றும்விளையாடலாம்.

Posted in கவிதைகள் | Comments Off on கடன்

மனிதம்மறந்து

ஏறிஇறங்காதெகிறிஉயருது எம்ஊர்விலைவாசிநித்தநித்தம். ஏன்எதற்கென்றுமேகேட்கவும்ஆளில்லை என்னதான்ஆகுமோஅன்னைமுற்றம்? பாறிச்சரியும்பணத்தின்பெறுமதி; பாணுக்கும்முட்டைக்கும்கூடயுத்தம்

Posted in கவிதைகள் | Comments Off on மனிதம்மறந்து

துரத்தும் பசி!

துரத்தும் பசிபோக்கத் தூண்டிலினை வீசுகிறான்…. துரதிஷ்டம் பலதடவை தோன்றி அகன்ற நொடி துரத்தும் பசிபோக்க தூண்டிலில் மீன் பரிசாச்சு!

Posted in கவிதைகள் | Comments Off on துரத்தும் பசி!

அருளாதோ தெய்வம்?

பசியென்ற பொறி இன்று புகைகின்றது -“நாளை பலிகேட்கும் அது” என்ற கதைவந்தது. உசிரோடு விளையாடும் விளையாட்டிது -பாய்ந்து உயர்கின்ற விலைவாசி சதி செய்யுது!

Posted in கவிதைகள் | Comments Off on அருளாதோ தெய்வம்?

வேம்பினது புண்ணியத்தால்

வைகாசிக் காற்று அடிக்கத் தொடங்கிய நேற்றிருந்து என்முற்றம் நெடுக இறைந்திருக்கும் வேம்பினது பூக்கள்! முற்றத்தில் பாய்விரிப்பாய் காலடிகள் பட்டுக் கசங்கும் அவை;

Posted in கவிதைகள் | Comments Off on வேம்பினது புண்ணியத்தால்

அறிதல்

தானெங்கே நகருவது என்று தெரியாமல், தான்போகும் பாதை சரியா அறியாமற் தான்…ஒரு நத்தை தன்பாட்டில் ஊர்ந்தபடி போகிறது!

Posted in கவிதைகள் | Comments Off on அறிதல்

ஒளிர்வாய்

அழகென்ற கொடிஆடும் அகிலத்திலே -வாழ்ந்தும் அதையாரும் இரசிக்கின்ற மனமில்லையே வளம் கோடி குவிந்தாலும் மனம் ஏங்குதே -யாரும் வயிறார உணவுண்ண வழியில்லையே!

Posted in கவிதைகள் | Comments Off on ஒளிர்வாய்

வராதிடர்

வாழவே வழியற்ற நாட்டிலே வாழ்வதென்பதோர் சாதனை. வாழ்வு என்பதன் அர்த்தம் என்பதை யார் உணர்ந்தனம்? போதனை-

Posted in கவிதைகள் | Comments Off on வராதிடர்

இயற்கை நீதி

போலிகளின் முகத்தில் கரிபூசுமாம் காலம்! வேசங் களுக்குள் விழுந்து; முகமூடி பூண்டு தம் முகத்தைப் புதைத்து; தங்களது உண்மைச் சுயரூபம்

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நீதி

நினைவலைகள்

நினைவுகள்தாம் எம்மை வழிநடத்தும் ஆசான்கள். நினைவுகள் தான் எமக்கு கரைகாட்டும் கலங்கரைகள். நேற்றை நினைவுகள் தான் நாளை நனவுகளின்

Posted in கவிதைகள் | Comments Off on நினைவலைகள்

சூழும் அறம்.

வரலாறு தடுமாறும் நேரம் – எங்கும் வலி சூழ எழும் சோக கீதம் தருமங்கள் இடும் நூறு சாபம் -செய்த தவறுக்கா பரிகாரம் தேடும்?

Posted in கவிதைகள் | Comments Off on சூழும் அறம்.

மெய்

நீங்கள் உரைத்துவிட்டால், நீவிர் நினைத்தபடி ஓங்கிக் குரல்வைத்தால், உம் தோழர் எல்லோரும் சேர்ந்து முழங்கிவிட்டால், சிந்தனையைப் பகிர்ந்தால்,

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

காப்பதார்…எம் கதை தேறி?

வீதிகள் தோறும் மானுட வெள்ளம் வேதனை தீர்த்திடத் தேங்கும். “மேதினி பார்த்தே மீட்டிட வேண்டும் விரைவில்” எனும் குரல் ஓங்கும். நீதியும் செத்து நியாயமும் பட்டு நிதி திருடப்பட வீங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on காப்பதார்…எம் கதை தேறி?

மே’ தின நிஜம்!

யார் தான் உழைப்பாளி இந்த உலகிலே? யார் தாம் ‘உழைப்பவர்’ இந்தப் புவியிலே? வேர்வை வார்த்து, நரம்பு தசைகளில் வியக்க வைத்திடும் சக்தி பிறப்பித்து, ஊரை ஒவ்வொரு கற்களைக் கொண்டுமே உயரச் செய்து, உழைப்புக்கு ஏற்றதாய்

Posted in கவிதைகள் | Comments Off on மே’ தின நிஜம்!

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும் வல்லமைகளும் தந்திடும். மாண்டு போனநம் மான மென்பதை மண்ணில் மீண்டுமே கொண்டரும். பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர் பீட்டைச் செய்கையால் மீட்டிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!