கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள்,
அடுத்தவரில்
காழ்ப்பு பொறாமை கொள்ளாக் காதல்,
ஒருவரது
வளர்ச்சியில் வயிறெரியா மனது,
ஆடம்பரங்களற்ற
எளிமை,
உழைப்புக்கு ஏற்ற கூலி தேடலன்றி
ஊரைச் சுரண்டி உடல்வளர்க்கும் அவா இன்மை,
“போதும்” எனும்உள்ளம்,
பொருள் தேடி உலையாமை,
“காலம் விதி கடவுள் கண்கொண்டு பார்த்திருக்கு
நீதி தவறின் நிம்மதியாய் வாழ ஏலாது”
என்று உணர்ந்து இளஞ் சந்ததியை வழிநடத்தும்
பண்பு, பதவிபுகழ் பார்ப்பதற்கு
-விற்றுவிடாத்-
தன்மானம்,
யாருக்கும் தாழா… அடிமை செய்யா…
சுயகெளரவம்,
என்றும் தொலைக்கா மரியாதை,
உயர்வுதாழ்வு பாரா உளம்,
ஊர் மதிக்கும் சொல்,
பயம் ஐயம் இல்லாப்
பலனை எதிர்பாரா
உயர் வாழ்க்கை, என்று…உலவுபவர்…
ஏழைகளாய்,
சாமா னியர்களாய்,
சமூகத்தில் அற்பர்களாய்த்,
தான்…நினைக்கப் படுகின்றார்!
பிழைக்கத் தெரியாத
பேதைகளாய் மாய்கின்றார்!
‘பெருமைமிகு வாழ்வு’ நிதம்
போராட்ட மாக;
பொருள், பெருஞ் சுகம், பலங்கள்,
ஏதுமிலா தலைகிறார்! தம்
சுயத்தைக் கெளரவத்தை
பாதுகாக்கப் பாடுபட்டார்!
இவர்க்கு மறுபுறத்தில்…
‘இவர்க்கு’ நேரெதிராய் எல்லாக்
குணமுமுள்ளோர்,
தவறு பிழைக்கஞ்சாத் தற்குறிகள்,
தம்நலத்தைக்
காக்க எதுஞ்செய்வோர்,
கண்ணியம் தொலைத்த ‘அரை
வேக்காடுகள்’,
செல்வர், வீரர் ,உயர்ந்தவராய்…
சமூகப் பிரமுகராய்…
சாதித்த செம்மல்களாய்…
சமூகத்தின் காவலராய்…
சகல செளபாக்கியம் பெற்று
சமூகத்தை வழிநடத்தும் தலைமையையும்
கொள்கின்றார்!

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம்,
மறு கணம், எல்லாம்
உந்தன் பயணம் ஒழுங்காய்த்தான்
ஒப்பேறும்!
காலம் உனக்குப் பாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுனக்கு
எதிராய் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால்
பயனில்லாப் போதினிலே…
காலம் “உனதுபணி
தேவையில்லை” என்கையிலே…
எந்த ஒரு கணத்திலும்,
எதிர்பாரா வேளையிலும்,
உந்தன் பயணம் ஒரேயடியாய்
முடிந்து போகும்!
‘உன்னால் உன் திறமையினால்
ஓடுகிறாய்’
என நீயும்
எண்ணாதே…
காலமும் நேரமும் மாறிவிட்டால்;
உன் மனது எண்ணினாலும்
உன் கால்கள் மறுதலிக்கும்.
உன்கால்கள் ஏற்றாலும்
உன்பாதை மாறிவிடும்.
உன் வேகம் குறையும்
உன்பயணம் பின்செல்லும்.
உன்வழியில் புயலடிக்கும்.
உன் திசையில் தடைகள் எழும்.
உன் பயண வாகனமும்
உனையிறக்கி விட்டகலும் !

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற
ஒவ்வொரு கணங்களிலும்
நடக்கவேண்டிய தென்னென்று
நம்விதியோ… தலையெழுத்தோ…
காலமோ… நேரமோ…
கடவுளோ…வினைப்பயனோ… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து
அடக்கிடும் போதும்…நூறு
ஆயிரம் இடர்கள் சீண்டி
அழித்திட முயலும் போதும்…
பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும்,
பயப்படாக் கை, கால், கண்ணும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும்
திசைகளிற் பூத்தன மலர்கள்.
தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும்
செடிகளில் தோன்றின தளிர்கள்.
பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும்
பின் எழும் புதுப்புதுப் பயிர்கள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை
இந்த நாட்களிலே!
மனிதர்கள், சராசரி
மனிதக் குணங்களுடன்
புறத்திலும் அகத்திலும்
புதிர்ப்போலி வேசங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து,
என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து,
என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு,
என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து,
ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து,
ஆயிரம் கதையளந்து, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான்
அங்கும் இங்குமே செய்திகள் பேசின.
அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி
அன்று… போரிடை வந்திட்ட செய்திகள்
முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு
மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்;
நேற்று மட்டுமல்ல
பரம்பரை பரம்பரையாய் வசித்து
மகிழ்ந்துயிர்த்த
ஊரது;
நிம்மதியாய் உண்டு களித்துறங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து
ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி!
எப்படித்தான்
குருதி உடலுள் சுழன்றோட
உயிர்துடித்து
இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை
வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை
தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம்
சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல்
கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து
கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.