பிழை பொறு.

பசுமைகள் பூசியே படரும் பொன் வயல்களும்
பரவி ‘இங்கிதம்’ தந்திடும்.
பலசாலி நானெனப் பவிசோடு முகம் காட்டி
பனை சுற்றி அணை போட்டிடும்.
கசிந்தூறும் கவிதையாய் அருளூறும் பொய்கையுன்
கழல் சுற்றிக் குளிரூட்டிடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிழை பொறு.

காரணி

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வித வாழ்க்கை.
ஒவ்வொரு உயிர்க்கும்
ஒவ்வொரு வகை வலிகள்.
ஒவ்வொரு உடற்கும் ஒவ்வொரு விதி,
துன்பம்.
ஒவ்வொரு வருக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காரணி

காணக் கிடைக்காக் கவின்

காணவே கிட்டாத கும்பாபி ஷேகத்தின்
காட்சிகள் காணல்… வரம்.
காலம் கனிந்தது, கனவும் பலித்தது,
‘கண்டு- கொள்வாய்’ புண்ணியம்.
மாசம் இப் ‘பங்குனி உத்தரக்’ காலையில்
மகா கும்பாபிஷேகம் நிகழும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காணக் கிடைக்காக் கவின்

பயணி

இந்தத் தெருஅறியும் எது தனது தொடக்கம்,
எந்த இடம் தனது முடிவு, அந்தம்,
என்பதனை!
அதிலே பயணிக்கும்
அனேகர் அறிவார்கள்
எது தொடக்கம் முடிவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பயணி

கோடைத் தகிப்பு

ஆயிரம் ஆயிரம் அனற் சுவாலைக் கைகளினை
நாலு திசைகளிலும் நகர்த்தித்,
தன் கொதிப்பைக்
கோடையாக்கி, திக்குகளைக்
கொள்ளிவைத்தும் கொழுத்தி,
சூட்டை ஒளியைச் சுரக்கின்றான் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

கூடி வாழ்

“யாரும் தேவையில்லை” என்று யாருமிங்கு வாழலாம்.
யாரையும் வெறுத்து நீ…ஒதுங்கி நின்று ஆளலாம்.
“யாரையும் நாம் நம்பவில்லை” என்று பலரும் கூறலாம்.
“யமனும், நோயும் என்ன செய்யும்”என்றும் மமதை கொள்ளலாம்.
“காசு, பட்டம், பதவி,உண்டு” என்று நீ நினைக்கலாம்.
“காசெறிந்தால் யாவும் ஆகும்” என்று நீ விசுக்கலாம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கூடி வாழ்

யாராலே வாழும் அறம்,தர்மம்?

யாருக்கும் மற்றவரைப் பற்றிக் கவலையில்லை.
யாருக்கும் ஏனையோர்கள் மீது
அன்பு, இரக்கமில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யாராலே வாழும் அறம்,தர்மம்?

பிரகடனம்

நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும்,
நீதியின் வழி சென்றிடும் கால்களும்,
அஞ்சிடாது தவறைத் திருத்திடும்
ஆற்றலும், பணம் காசு பதவியில்
கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம்
கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிரகடனம்

நிலை

சோத்துக்கு வழியில்லை. சோதனைக்கு முடிவில்லை.
சோத்தியாய்த்தான் நாடு…ஆனால்
சோடனைக்குக் குறைவில்லை.

தலையில் முடியில்லை.
வளர வழிகளில்லை.
விலைமிகுந்த கொண்டையுடன்
வேசத்திற் களவில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிலை

மர(ன)ம்

மரம் தனது அன்பை
அயலிலுள்ள உயிர்களுக்குத்
தருகிறது… பூக்கள், காய்கள்,
பழம் விதையாய்;
இதநிழலாய்;
கிளைகள் இலைகள் அசையவரும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மர(ன)ம்

மெய்

மெய்யென்று சொன்னது பொய்யாகிப் போனதே
மேனியைத் தீ தின்றதே!
மீட்டிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுதே
மெய்யுடல் இன்றில்லையே!
ஐயகோ எத்தனை அழகு புனைந்தனம்
அடிக்கடி குளிப்பாட்டியே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

எதார்த்தக் கவிதை எழுது!

கண்களில் ஆயிரம் கனவு ததும்பக்
கவிதை எழுதடா கவிஞா!
காலத்தை வென்றிடும் கற்பனை கூட்டி நற்
கருத்தை விதையடா கவிஞா!
புண்களை மாற்றிடும் பொது மருந்தொன்றையே
பூசடா கவிதையாய்ப் புலவா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எதார்த்தக் கவிதை எழுது!

புனல் வாதம்

சற்று ஓய்ந்து கிடந்து…மறுபடி
சாரை சாரையாய்க் கொட்டும் மழை! நிலம்
முற்றாய் ஊறிச் சிதம்பி நிரம்பியே
மூழ்கிற்று; வீடு, வயல்கள்,தெரு,குளம்
வற்றாக் கிணறுகள் யாவும் நிறைந்தது.
மனங்களும் ஈரஞ் சுவறி நடுங்குது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புனல் வாதம்

மீட்டிற்று

ஓர் ஐந்து மணித்துளிதான்…
உயிரிழந்து சடலமாகி
மாய்ந்தது மின்…இந்த வளத்திரு நாடெங்கும்!
இப்படி ஒருநிலமை,
தொழில்நுட்பச் சேதாரம்,
எப்பவும் நடந்ததுவோ முன் எங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மீட்டிற்று

இயற்கையொடு இழைதல்

எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
எதிர்வுகூறிப் பார்த்திருந்தோம்.
இதோவரும்…
இன்னும் இருமணியில்…
இரவினில்…
கொட்டும் மழையென்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கையொடு இழைதல்