பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது.
இயற்கையை அடக்க
எவராலும் இயலாது.
இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது.
இயற்கை ஏன் மாறுதென்று
எவரும் கேட்கலாகாது.
இயற்கையைச் சீண்டினால்…
இயற்கை எமைத் தோண்டி
உயிரோடே புதைத்துவிடும் என்பதுதான் நிஜம், யதார்த்தம்.
இயற்கையின் மாற்றத்தை
எம் அறிவு, கருவிகளால்
உய்த்தறிய முடியும்.
ஒரு ‘வானிலை’ அறிக்கைச்
செய்தியாக்க இயலும்.
‘காலநிலைக் குழப்பம்’
எப்ப எவ்வாறு எங்குவரும் என்பதனை
ஒப்பீட் டளவில் ஓரளவு சரியாகச்
சொல்லவும் முடியும்.
தொட்டவற்றைக் கலைத்திடவோ…
“எல்லைக்குள் வராதீர்” என்று
துரத்திடவோ…
இயற்கை செயும் அழிவை
எதிர்த்துத் தடுத்திடவோ…
இயற்கையை நாம் நினைத்தபடி
இருத்தி எழுப்பிடவோ…
இயற்கையதன் சீற்றத்தை
எப்படியும் தணித்திடவோ…
இயற்கையதன் கோபத்தை
எமக்கேற்ப ஆற்றிடவோ…
எந்தப் பலம், அறிவு இருந்தாலும்
முடியாது!
எந்த அறிவியலும் இயற்கையை
வழிநடத்தல்
இயலாது!
இந்த எதார்த்தம் மிகப் புரிந்து, ‘எம்
இயலுமையின்’ ஆழ நீள அகலத்தை
ஏற்றுணர்ந்து,
இயற்கையுடன் இயைந்து,
இயற்கையுடன் இணைந்து,
இயற்கைக்குப் பயந்து,
இயற்கையின் முன் பணிந்து,
இயற்கையினை மீறாது,
இயற்கை வழி மாறாது,
அது கோபம் கொள்ளா திருக்கவைத்து,
கோபமுற்றால்…
அதிலிருந்து யாம் தப்ப என்னவழி
என ஆய்ந்து,
அது மகிழ்ந்து பொங்கையிலே
அதனால் பலன்பெற்று,
அதனை மதித்து,
அதன் இயல்பைப் புரிந்து,
அதனை அனுசரித்து,
அதனை அரவணைத்து,
அதைப்பகையாய் ஆக்காமல்
அதை நட்பாய் ஆக்கிவைத்து,
அது குளிர எங்களினால்
ஆனதனைச் செய்து,
அதற்கு எதும் படைத்து,
அது ஆனந்திக்க வைத்து,
அதனோடொத் தோடுவதே
அனைவருக்கும் நன்மையென்பேன்!
நம்முன்னோர் அதைத் தெளிந்து,
நடந்து,
அதனோடிணைந்து,
தம்மைத்தாம் காத்தார்கள் என்பதை
நான் அறிகின்றேன்.
இயற்கையை நாம் விட்டகல…,
இயற்கையுடன் முட்டி மோத…,
இயற்கையெமைக் கைவிட்டு
எதிர்க்குமெமை உணர்கின்றேன்!

“இயற்கையும் – காலமும், இறை, விதியும், வேறல்ல”
உயர்ந்தோர்கள் சொன்னார்கள்!
இயற்கையைப்போல் ‘காலம், இறை,
விதியுடனும் புழங்குவதே
விபரீதமில்லாது வாழும்
மதிநுட்பம்;
புரிந்தோர்க்கு வாழ்நாளில்
இல்லையச்சம்!

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து
ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி!
எப்படித்தான்
குருதி உடலுள் சுழன்றோட
உயிர்துடித்து
இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட…
‘இயற்கை – உடல்’ கணமும்
இயங்கிக்கொண் டிருக்கிறது!
இயற்கைக்கு இடையறாது
உயிரூட்டல் மட்டுமன்றி
குருதிக்கும் காலத் தினுக்கும்
பல்வேறு
பொருத்தங்களும் உளது!
இயற்கையின் அங்கங்கள்
தரை,கடல், காற்று, மலை, தாவரம், விலங்கு,
அனைத்தையும் போஷித்து,
அவற்றினது மூச்சிற்குக்
கணந்தோறும் காற்றடித்து,
கனற்சக்தி பிறக்கவைத்து,
தினம் இயற்கை தனிலிருந்து
சேரும் கழிவுகளைப்
பரிகரித்து,
இயற்கையில் கிருமி தொற்றாது தடுக்க
சிறந்த ‘நிர்ப்பீடன’
பொறிமுறைபோற் பாதுகாத்து,
சக்தி கொடுத்து,
சத்துகளும் அளித்து,
அத்தனை வளர்ச்சிக்கும்
அளவளவாய் ஓமோன்கள்
நொதியஞ் சுரந்து,
நோய் நொடியில் சாயாமல்
உதவி புரிந்து,
ஓயாமல் காயாமல்
இயற்கை செழிக்கவைத்து,
உயிரோட்டம் மாறாமல்
இடையறாது ஓடி…
எழில் மினுக்கம் ஊட்டி,
தடைகளற்று இயற்கையங்கம் தழைக்கத் துணைசெய்யும்
காலக் குருதி;
அது ஓடும் இன்னுமின்னும்
கோடிகோடி ஆண்டு;
இயற்கை கொழிக்கும் உயிர்பெருகி!

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை
வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை
தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம்
சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல்
கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து
கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.

இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது.
கெளவிற்று இரவுப் பறவை
பகற்பழத்தை.
முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக
நிற்கிறது பொன்நிலவு
எனது தலைக்குமேல். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இரவும் ஒரு இறையே!

கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதி செய்

Posted in Video | Comments Off on வேண்டித் துதி செய்